Friday 30 December 2016

பாம்புகளை சாகடிக்க
வேண்டாமென முன்னோர்கள்
சொன்ன காரணம்.
நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே
பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய
கால ஞானிகள் பாம்பு வடிவத்தை
மூலாதார சக்கரத்தில் உறங்கி
கொண்டிருக்கும் குண்டலினி
சக்தியாகவும் அமானுஸ்யம்
நிறைந்ததாகவும் கண்டார்கள் .
புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி
விட்டால் சீறிக் கொண்டு எப்படி
கிளம்புமோ அதே போலவே யோக
பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி
தண்டுவடத்தை பற்றிக் கொண்டு
சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி
எழும்பும் என்று சொன்னார்கள்.
இதனால் தான் கடவுள்களின்
உருவத்தோடு நாகத்தை
சம்பந்தப்படுத்தினார்கள்.
பரந்தாமனின் பாம்பு படுக்கை
பரமசிவனின் பாம்மனி எல்லாமே
குண்டலினி தத்துவத்தை விளக்க
எழுந்ததே யாகும்
இனி நாக வழிபாடு நம் நாட்டில்
எப்போது இருந்து
கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை
சற்று ஆராய்வோம்.
இந்திய துணைக்கண்டம் முழுவதுமே
ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு,
இருந்து வருகிறது.
சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம்
போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த
காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை
கொண்டு இந்திய துணைக் கண்டம்
முழுவதுமே நாக வழிபாடு
விரிவடைந்தன என சொல்லலாம்.
திருமாலும் சிவபெருமானும்
மட்டுமே நாகங்களை துணையாக
கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை
பார்க்கும் போதும் மகாவீரரின் சில
தோற்ற கோலங்களை காணும் போதும்
ஐந்து தலை நாகம் அவர்களுக்கு
குடைபிடித்து இருப்பது
தெரிகிறது.
சிந்து சமவெளி நாகரிக காலத்திலும்
அதற்கு முன்னரும் கூட நாகங்களை
மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.
ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு
முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய
நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை
வைத்து நாம் இந்த முடிவுக்கு
வரலாம்.
வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை
பற்றி விரிவான குறிப்புகள்
வருகின்றன.
வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற
பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக்,
சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக
பாம்புகள் சொல்லப்படவில்லை.
ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ
நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது
யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில்
தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பழங்கால பாஞ்சல தேசத்திடில்
தலைநகரம் அஹீ சத்திரமாகும். அதாவது
இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று
சொல்லலாம்.
இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய
அக்னிமித்திரன், பானு மித்திரன்
ஆகியோர்களின் காலத்து நாணயங்களில்
பாம்பு முத்திரை
பொறிக்கபட்டுள்ளது.
அதர்வண வேதத்தின் சில பகுதிகளில்
பாம்புகளை தாந்திரிக நெறிக்கு
பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும்
பௌத்த நூலும் பேசுகிறது. அதில்
சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ
என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை
பற்றி விளக்கங்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன.
குஷான மன்னர்களின் காலத்தில் இந்த
நாக வடிவம் சிலை வடிவாக
உருவாகியிருக்கலாம் என
நம்பப்படுகிறது.
மதுராவில் உள்ள அருங்காட்சியகம்
ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி
வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும்
இருக்கிறது.
கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட
நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின்
ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும்
புதையல்களை மர்மமான முறையில்
பாதுகாக்கப்படுகின்றன என்றும்
நம்பிக்கை ஏற்பட்டது.
பாம்புகளை பொறுத்த வரை எல்லா
மதத்தினரும் அறிவு பூர்வமாகவும்,
மூடத்தனமாகவும் நம்பினர் என்றே
சொல்ல வேண்டும்.
பண்டைய கால சிற்பங்களும்,
ஓவியங்களும், நாகர்களும், நாக
கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.
இவர்கள் பாதி மனித உருவம், பாதி
பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.
பாலித்தீவில் நாக கன்னிகை மழை
கடவுளான வருண தேவனின்
பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.
மலாய்காரர்களின் கிரீஸ் {KERIS} என்று
சொல்லப்படும் ஆயுதம் கூட பாம்பின்
வடிவில் இருப்பதை பார்த்திருக்கலாம்
ஜோதிட சாஸ்திரத்தில் காணப்படும்
சர்ப்பக் கிரகங்களாகிய இராகு
கேதுக்களை வைத்து நம் பரம்பரையில்
நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம
வினை சாரங்களை கண்டரிய முடியும்
என்று கூறுகின்றார்கள்.
இதையே சீனர்கள் {DRAGON} கடல்
நாகங்களாக வழிப்படுகின்றார்கள்
மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில்
நாகத்தை வழிபடுவதன் மூலம்
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில்
ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை
பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனாலேயே பிற்காலத்தில் உருவான
வராக சிற்பத்தில் காலுக்கடியில்
பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை
முறையை விவரிக்கும் சங்க
இலக்கியங்களில் நாக வழிபாடு
சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.
பொதுவாக பாம்புகளை வழிபடுவது
இந்து மதத்தில் உள்ள யோக சார
மார்க்கத்தின் வழிபாட்டு
முறையேயாகும்.
ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து
இன்று கிராம தேவதைகளின்
பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து
விட்டன.
இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின்
ஆன்மா பாம்பு வடிவத்தில்
உலாவுவதாக உள்ள நம்பிக்கையே
ஆகும்
நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக
சாகடிக்க கூடாது என்று சொல்வதில்
பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு
சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்
மனித ஆத்மாவானது மனித சரீரத்தை
தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின்
உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம்
என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள்
சொல்கின்றன
இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும்
இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை
தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்
நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை
சாகடித்தால் அவர்களின் தவத்தைக்
கலைத்த பாவத்திற்கு ஆளாவோம்
எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க
வேண்டாமென முன்னோர்கள்
சொன்னார்கள்
அ என்றால் சூரியன், உ என்றால் இந்திரன், ம் என்றால் அக்னி. எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம். பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின்காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது. ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம் மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது. நாபியில் ‘அ’ எனத் தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம், மணி, நாள், மாதம், ஆண்டு ஆகிய உருவ அளவைகளால் உணரலாம்.

இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற உருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின் (அண்டம்) சிறிய பகுதி உடல் (பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம். நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும். குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும். செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது. இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கிணைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின் (தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்...
மார்கழி மாதப் பழமொழிகள்



'மார்கழி மாதம் மச்சும் குளிரும்', 'மார்கழி குளிர் மாசி வரை இருக்கும்' போன்ற பழமொழிகள் மார்கழி மாத பருவ நிலையை உணர்த்துகின்றன.'மார்கழி பிறந்தால் மழையும் இல்லை,

பாரதத்திற்கு பிறகு படையும் இல்லை' என்ற பழமொழி, மகாபாரதப் போரில் பங்குபெற்ற

படைகளின் சிறப்பை விளக்குகிறது. 'மார்கழி வெற்றிலையை மாடு கூட தின்னாது' என்னும் பழமொழி மார்கழி மாதம் பனியால் வெற்றிலை சுவை இழப்பதைக் காட்டுகிறது. 'போர்த்திக் கொண்டவர்களை காத்துக் கொண்டு இருக்குமாம் போக்கிடம் இல்லாத குளிரு' என்னும் பழமொழி, மார்கழி மாதத்தில் போர்த்த, போர்த்த குளிரும் என்பதையும் போர்த்துவதை விட்டால், குளிரும் போய்விடும் என்பதைக் காட்டுகிறது
12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
குருதரிசனம்

கேள்வி பதில்

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுhதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை ருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர்.

39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.

40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா

42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.

44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.

45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்

57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.

62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

65. குரு நேசம்?
சிவ நேசம்.

66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.

69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.

83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.

90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.

92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.

95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்

102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாக இருப்பார்.

110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.

112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.

121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.

122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;

123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.

124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.

128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.

135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ

139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........

149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.

151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.

153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.

158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - அருள்பவர்

160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.

163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே - மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம் ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது - மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.

கேள்விகள் இறை தேடல் உள்ளவர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.
தேன்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

  சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

  கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

  மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

  தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

  எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

  தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

 அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.


இரத்த சோகையை அகற்ற:


  நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.

  தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

  தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

  தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

  சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

  தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

  தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

  தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.

  டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

  கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.

  முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன:

  சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.  
முருகன் 25 ருசிகர தகவல்கள்
முருகன் 25 ருசிகர தகவல்கள்

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

21. முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.🙏🙏🙏🙏
தமிழ் எண் வடிவங்கள்....
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

௳ = நாள்
௴ = மாதம்
௵ = வருடம்

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

Thursday 29 December 2016

18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.
## சிதம்பர ரகசியம்!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.
உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்! மூத்த குடி தமிழன்!!! அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ…
பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.
இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.
2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.
3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.
4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல்[எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)
6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.
7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.
8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.
9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.
10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.
11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.
12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]
13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]
இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴சிவனை வணங்கிய உயிாினங்கள், திருத்தலங்கள்.🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤|¤¤¤¤

🔴1.அணில்.
குரங்கணில் முட்டம்.
🔴2.ஆமை.
திருக்கச்சூா்.
🔴3.ஈ.
திருஈங்கோய்மலை.
🔴4.எறும்பு.
திருவெறும்பூா்.
🔴5.காகம்.
குரங்கணில் முட்டம்.
🔴6கருடன்.
திருச்சிறுகுடி.
🔴7.கழுகு.
திருக்கழுக்குன்றம்.
🔴8.கருங்குருவி.
திருவலிவலம்.
🔴9.சிலந்தி.
திருவானைக்காவல்.
🔴10.குரங்கு.
திருக்குரக்காவல்.
🔴11.எலி.
திருமறைக்காடு.
🔴12.தேனீ.
நன்னிலம்.
🔴13.வண்டு.
திருநல்லூா்.
🔴14.பசு.
ஆவூா் பசுபதீஸ்வரம்.
🔴15.பன்றி.
திருச்சிவபுரம்.
🔴16.நாரை.
திருநாரையூா்.
🔴17.ஜடாயு பறவை.
திருச்சிராப்பள்ளி.
🔴18.பாம்பு.
திருப்பாம்புரம்.
🔴19.நண்டு.
திருந்துதேவன்குடி.
🔴20.முயல்.
திருப்பாதிாிப்புலியூா்.
🔴21.மயில்.
மயிலாடுதுறை.
🔴22.வெள்ளை யானை.
பெண்ணாடகம்.
🔴23.கருப்பு யானை.
திருக்காளஹஸ்தி.
🔴24.ஐராவதம்.
திருப்பனந்தாள்.
🔴25.காமதேனு.
தில்லை ஸ்தானம்.
🔴26.பூனை.
மேலப்பாதி.
🔴27.தவளை.
ஆத்தூா்.
🔴28.மீன்.
கோவில் னதேவராயன்பேட்டை.
🔴29.நாகம்.
தேப்பெருமாநல்லூா்.
🔴30.வாசுகி(பாம்பு)
கோவில் திருமாளம்.
சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?

சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.

உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?


 சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்

சிவ ஆலங்களில் சண்டீகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்

மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர்
எனவே சிவஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று
மெதுவாக சத்தாம் வராமல்வராமல் கைகளை துடைத்து ,சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம்
கலையாமல் சொய்யவேண்டும்
இதுவே மறையாகும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!!

அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை
🔆 உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.

🔆 தலை நடுவில் (உச்சி)

🔆 நெற்றி

🔆 மார்பு

🔆 தொப்புளுக்கு சற்று மேல்.

🔆 இடது தோள்

🔆 வலது தோள்

🔆 இடது கையின் நடுவில்

🔆 வலது கையின் நடுவில்

🔆 இடது மணிக்கட்டு

🔆 வலது மணிக்கட்டு

🔆 இடது இடுப்பு

🔆 வலது இடுப்பு

🔆 இடது கால் நடுவில்

🔆 வலது கால் நடுவில்

🔆 முதுகுக்குக் கீழ்

🔆 கழுத்து

🔆 வலது காதில் ஒரு பொட்டு

🔆 இடது காதில் ஒரு பொட்டு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் எல்லோரா குகையினுள் இருக்கும் 'கைலாசா கோயில்' தான் உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும்.
எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கைலாசநாதர் கோயிலைப் பார்த்தவுடன் அனைவரின் மனங்களிலும் ஒரு கேள்வி எழும். உலக அதிசயங்களில் ஒன்றாக இதை ஏன் சேர்க்கவில்லை என்பதே அது...
இந்தக் கோயிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. மலையின் 3 பக்கங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. கோயில் பிரகாரத்துக்காக அந்தக் கற்பாறை யில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு ள்ளது. நடுவில் பெரிய பாறையை உளியால் செதுக்கி, அதில் பிரதான கோயிலை வடித்திருக்கிறார்கள். 83 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம், 33 மீட்டர் ஆழத்தில் கோயில் உருப்பெற்றுள்ளது.
விமானத்துடன் கூடிய இந்த கைலாசநாதர் கோயிலை வடிக்கச் செய்தவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி. 757 முதல் 773 வரை. இந்துக் கோயில்களின் கட்டிடக் கலை அமைப்பை ஆராய்ந்த அறிஞர் ஜி.பி. டேக்லுர்கார் இந்தக் கோயிலுக்கு 100 முறைக்கு மேல் வந்துள்ளார். ஒரு முறை இந்தக் கோயிலுக்கு அவருடன் ஓர் ஆங்கிலேயேரும் வந்தார். கோயிலை மிகவும் பாராட்டிய அவர், "அப்படி என்னதான் இந்தக் கோயிலில் சிறப்பு?" என்று கேட்டார். "மலையைக் குடைந்து அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி, அந்தப் பாறையையே சிறு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி சன்னதிகளாகவும் யானைகளாகவும் கீர்த்தி ஸ்தம்பங் களாகவும் கட்டியிருக்கிறார்கள். கோயில்கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்துவரவில்லை. இந்தக் கோயிலில் உள்ள அனைத் தும் இதே மலையின் கற்களாலா னவை" என்று டேக்லுர்கார் பதில் அளித்தார்.
கி.பி. 6-வது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரை இக்கோயிலை கட்டும் வேலை யில் ஏராளமான ஸ்தபதிகள், கல் தச்சர்கள், கைவினைக் கலைஞர் கள், கோயில் கட்டுமானத்தில் தலைசிறந்த விற்பன்னர்கள், மலைகளைக் குடைவதில் கைதேர்ந் தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 34 குகைகள் குடையப்பட்டன. எண்கள் இடப்பட்ட 34 குகைகளும், எண்களிடப்படாத 7 குகைகளும் ஜைன, பவுத்த, இந்து மத நம்பிக்கை களை உணர்த்துவதாக உள்ளன.
இவற்றில் 1 முதல் 12 வரையிலான குகைகள் பவுத்தர்களின் நினைவாலயங்கள். 13 முதல் 29 வரை இந்துமதச் சாயல் உள்ளவை. 30 முதல் 34 வரையுள்ளவை ஜைனர்களுடையவை. 16-ம் எண் குகைதான் நாம் வியந்து கொண்டிருக்கும் கைலாசநாதர் கோயில் வளாகம்.
இந்தக் கோயிலைக்கட்டி முடிக்க 150 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதலாவது கிருஷ்ணர் காலத்தில் தொடங்கிய கோயில் கட்டுமானம் யாருடைய காலத்தில் முடிந்தது என்று தெரியவில்லை. அதே வேளையில், கோயில் கட்டுமானம் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே சில வேலைகள் முடிக்கப் பெறாமல் இருக்கின்றன.
கோபுரம் இரட்டை அடுக்கிலா னது. நந்தி மண்டபமும் கோபுரமும் 2 அழகிய கல்துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிகரம் 3 அடுக்கு களைக் கொண்டது. போகப்போக குறுகிச் செல்லும் அகலம் உள்ளது. இந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு நோக்கியவண்ணம் இருக்கிறார்.
இந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவ தைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசை யாக வடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னு டைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கை தருவது வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப்போல சிற்பம் காட்சி தருகிறது.
இன்னொருபுறத்தில் பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. சிவனுக்கும் பார்வதிக்கும் திரு மணம் நடந்ததைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பமும் அருகிலேயே முப்புரங்களையும் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேரில் சிவன் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்று கொண்டு வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறிவைப்பதுபோல் திரிபுராந்தகர் சிலை இருக்கிறது. அந்தத் தேருக்கு பிரம்மாதான் சாரதி. 4 வேதங்கள் தேரின் சக்கரங்களாகத் திகழ்கின்றன. இதையே அடிப்படை யாகக் கொண்டு தஞ்சாவூர்க் கோயிலொன்றில் திரிபுராந்தகர் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறார்.
ஒரு சிற்பம் சிவனின் நாதாந்த தாண்டவத்தைச் சித்தரிக்கிறது. 108 தாண்டவங்களில் இதுதான் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில்தான் சிவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறார்.
இந்தக் கைலாசநாதர் கோயிலில் சிற்பிகள் எது எது எங்கே இருக்க வேண்டுமென்று தங்களுக்குள் நன்கு தீர்மானித்துவிட்டு அற்புத மாக அப்படியே வடித்துள்ளனர். கைக்குவந்தபடி சிற்பங்களை வடிக்கவில்லை. உலகின் அதிசயங் களில் ஒன்றாகக் கருதத்தக்க வகை யில் அற்புதமான பக்தியோடு, கலை ரசனையோடு, ஈடுபாட்டோடு இந்தச் சிற்பங்களை வடித்துள் ளனர், ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அதிலும் 3 வெவ்வேறு தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஒரே கோயிலுக்காக உழைத்துள்ளனர். இதில் பக்தி மட்டும் இல்லை, மிகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கவேண்டும் என்ற தாகமும் சேர்ந்து பரிணமித்துள்ளது.
எல்லோரா கோயில் மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது. மலையில் பாறை எந்த ஆழம் வரை இருக்கும், போகப்போக என்ன தன்மையில் இருக்கும் என்றெல்லாம் தெரியாது.
ஆனாலும் அதையும் துல்லியமாக கணக்கிட்டு கோவிலை வடிவமைத்தவர்களின் கட்டிடகலையை பாராட்ட வார்த்தைகளே போதாது...
தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12

மெய் எழுத்துக்கள்: 18

உயிர்மெய் எழுத்துக்கள்: 216

ஆய்த எழுத்து: 1

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்

அ(படர்க்கை),

இ(தன்னிலை),

உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக
மூன்று மெய்யெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்,
ம்+இ கூடி 'மி' யாகவும்,
ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று
தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்தில் உள்ள
உகரத்தைத் நீக்கி
தமிழ் என்று அழைத்தனர்.

அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே...
உருத்திராட்சம் எல்லோரும் அணியலாமா ?
சிவபெருமானின் கண்களில் தோன்றிய நீரே உருத்திராட்சமானது. அதை அணிபவரை அவர் தன் கண் போல காப்பாற்றுவார். ஆகவே, கண்டத்தில் மணியாகும் உருத்திராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர் வரை, ஆண் பெண் என இரு பாலரும் தாராளமாக அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்தே இருக்கலாம்.
சிகப்பு நூலினால் (சக்தி) 5 முக உருத்திராட்சத்தை (சிவன்) கோர்த்து, உருத்திராட்சத்தின் இரு பக்கமும் ஓர் முடிச்சு போட்டு கழுத்தில் தொங்குமாறும் (சிவசக்தியாக) வெளியே தெரியுமாறும் 3 முடிச்சு போட்டு அணிய வேண்டும்.இந்த முடிச்சு பின் பக்கமோ, வலது தோள் பக்கமோ இருக்க வேண்டும்.
இந்த உருத்திராட்சத்தை ஒருபோதும் எக்காரணம் கொண்டும் கழற்றவே கூடாது. நம்மோடு கூடவே இருந்து நாம் சிவனடி சேரும் வரை நம் கூடவே வரவேண்டும்.
ஆலகால விடத்தை சிவபெருமானார் தம் கழுத்தில் தங்க வைத்து உயிர்களைக் காத்ததை குறிக்கும் பொருட்டே கண்டமணி அணிகிறோம். இயற்கையாகவே நம் கழுத்து பகுதியில் விஷத்தை முறிவு செய்யும் காரணிகள் உள்ளன. ஆதிபராசக்தி தன் உடல் முழுவதும் திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கொண்டதாக அருணாசலபுராணம் கூறுகிறது. ஆகவே, பெண்கள் எல்லோரும் எல்லா சமயங்களிலும், விலகி இருக்கும் நாட்களிலும் கண்டிப்பாக தவறாது அணிந்திருக்கலாம்.
நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன் மனைவி தாம்பத்திய நேரம் என்று எல்லா நேரங்களிலும் தவறாமல் கண்டமணியை அணிந்திருக்கலாம். கண்டமணி அணிந்து கொண்டு நீங்கள் எப்போதும் போல வாழ்கையை மேற்கொண்டிருங்கள்.
உருத்திராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டு விட முயற்சிக்க வேண்டும். முக்கியமாக மாடு, பன்றி மாமிசத்தை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.
உருத்திராட்சம் அணிவதால் மனமும் உடலும் தூய்மை அடையும். இதை அணிந்த பின்னர் எந்த துர் சக்தியும், தீய சக்தியும் உங்களை அண்டாது. உருத்திராட்சம் ஒரு சிவ கவசமாக இருக்கும். நீராடும் போது, கண்டமணியில் பட்டு வரும் நீர் கங்கைக்கு சமமாகும். சிறுவர்களுக்கு நல்ல படிப்பு திறனும், கவன ஒருமை, ஞாபக சக்தியும் கிடைக்கும். பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் உறுதியான தாலி பாக்கியமும் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். என்ன கிடைக்காது உருத்திராட்சம் அணிபவர்களுக்கு ? உருத்திராட்சம் அணிந்தவர்களுக்கு இந்த பிறவியில் செல்வமும், உடல் நலனும், இன்பமான வாழ்கையும் கிடைத்து இறுதியில் முக்திபேறும் கிடைக்கும். உருத்திராட்சத்திற்கு இயற்கையாகவே மருத்துவ குணங்களான இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும், உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் தன்மையும் உள்ளது.
உருத்திராட்சம் அணிந்து நெற்றி நிறைய நீறு பூசி, பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்பவர்களுக்கு சிவபெருமானார் கூடவே இருந்து வேண்டியவற்றை செய்வார். உருத்திராட்சம் அணிய சிலர் தயங்குகிறார்கள். இந்த தயக்கம் தேவையற்றது. யார் வேண்டுமானாலும் கண்டமணி அணியலாம். உருத்திராட்சத்தை மாலையாக அணியும் போது தான் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. சிவதொண்டு செய்யும் போதும், சிவாலய தரிசனம் செய்யும் போதும், சிவ பூசை செய்யும் போதும் யாரும் உருத்திராக்க மாலை அணியலாம்.
ஆகவே, இன்னும் ஏன் தயக்கம் ? இன்றே உருத்திராட்சம் அணியுங்கள். உங்கள் மனைவி, குழந்தைகளுக்கும் அணிவியுங்கள். உங்கள் வீட்டு கால்நடைகளுக்கும் வாகனத்திலும் உருத்திராட்சத்தை அணிவிக்கலாம். உருத்திராட்சத்தை அணிந்து, நெற்றி நிறைய திருநீறணிந்து பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாயநம சொல்லுவார்க்கு ஒரு தீங்கும் நெருங்கவே நெருங்காது.
எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம்.

அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.

மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும் நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்
மூலவர் : *அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)*
உற்சவர் : -
அம்மன்/தாயார் : *கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி*
தல விருட்சம் : *பாதிரிமரம்*
தீர்த்தம் : *காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.*
ஆகமம்/பூஜை : -
பழமை : *1000-2000 வருடங்களுக்கு முன*்
புராண பெயர் : *திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி*
ஊர் : *அவிநாசி*
பாடியவர்கள்: *சுந்தரர்*
🅱 *தேவாரப்பதிகம்:*
*எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.* -சுந்தரர்.
👉🏾 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் இது முதல் தலம்.
*திருவிழா:*
சித்திரையில் பிரமோற்ஸவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.
*தல சிறப்பு:*
👉🏾இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
👉🏾 கோயிலின் தல விருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.
👉🏾 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.
*திறக்கும் நேரம்:*
காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.
*பொது தகவல்:*
மைசூர் மகாராஜா வம்சத்திற்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம். இத்தலத்திற்கு அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமான திருமுருகன்பூண்டி இருக்கிறது. கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது. 63நாயன்மார் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.
*பிரார்த்தனை:*
இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.
*நேர்த்திக்கடன்:*
இத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.
*தலபெருமை:*
*காசியில் வாசி அவிநாசி:*
காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும். அவிநாசி என்றால்... *"விநாசம்'* என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் "அ' சேர்த்தால் *"அவிநாசி'* எனப்படும். இது அழியாத்தன்மை கொண்டது எனப்படும்.
*"நல்ல' சனீஸ்வரன்
வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார்.
இங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள். சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். மாணிக்கவாசகர் மதுரையிலிருந்த படியே அவிநாசியை பாடியுள்ளார்.
சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்த வடிவிலானது. தியானம், பூஜை முறை தெரியாதவர்கள் மனமுருகி சிவனையும் அம்மனையும் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்கிறார்கள். இத்தல இறைவன் திருடனுக்கும் முக்தி கொடுத்துள்ளார்.
பைரவருக்கு அருகே வியாதவேடர் என்ற திருடனுக்கு சன்னதி உள்ளது சிறப்பு. இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.
*விருச்சிக ராசியினருக்கு:*
கருணாம்பிகை சன்னதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். தேள்கடி, மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சன்னதியில் வழிபட்டு பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். விருச்சிகத்தை வணங்கும் முன், நுழைவு வாயிலில் குபேர திசையான வடக்கு நோக்கியுள்ள செல்வ கணபதியை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.
*காசி பைரவருக்கும் முற்பட்டவர்:*
64 பைரவ முகூர்த்தத்தில் இத்தல பைரவர் *"ஆகாச காசிகா புரததனாத பைரவர்'* எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. இவர் உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.
*குருவின் குரு
சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
*தல வரலாறு:*
சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் *"முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்'* நடக்கிறது.
*சிறப்பம்சம்:*
*அதிசயத்தின் அடிப்படையில்:* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது.
திருச்சிற்றம்பலம்
வீபூதி .... மூன்று கோடுகளின் மகிமை ..!!

முதல் கோடு ......
அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.

இரண்டாவது கோடு .......
உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.

மூன்றாவது கோடு ........
மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்
காலையில் பாடும் ராகம் பூபாளம்
உச்சியில் பாடும் ராகம் சாரங்கா
மாலையில் பாடும் ராகம் வசந்தா
இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி
மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி
யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை
வெண்பா பாட சங்கராபரணம்
அகவல் இசைக்க தோடி
தாழிசைக்கு கல்யாணி
 கயிலை நாதனைக் கவர்ந்த ராகம்  காம்போதி
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
VALMIKI RAMAYANA(ALL 6 KANDAMS) IN 108 EASY TAMIL SENTENCES! THOSE WHO ARE UNABLE TO READ RAMANAYANA COMPLETELY CAN READ THESE 108 SENTENCES AND GET BENIFITTED
1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10. சென்று மந்திரம் கற்றனை ராமா
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம்பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா
அயோத்யா காண்டம்
26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
ஆரண்ய காண்டம்
35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
கிஷ்கிந்தா காண்டம்
46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா
சுந்தர காண்டம்
56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா
யுத்த காண்டம்
65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக் கணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா
80. விபீஷணன் முடிசூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
91. லவகுசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா
93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நரஹரி ராகவ நாரண ராமா
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.
*தவிர்ப்போமே* _ஆங்கிலப்புத்தாண்டு நள்ளிரவு ஆலய தரிசனத்தை_.....

சமீபகாலங்களாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் விடிய விடிய பிரதான ஆலயங்களை திறந்து வைத்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். அர்ச்சனைகளை பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர். அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு முரணானது.

நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு.

ஒரு நாளின் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா?

மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும் நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

ஆனால், புத்தாண்டு அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசு இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறது. இந்த பழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு மெளனமாக உள்ளனர். (அவர்களை சொல்லி குற்றமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்ககளின் போது தான் கோவிலில் வேலை செய்வதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று கருதும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்!)

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் எச்சரித்தும், கோவிலை காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..

இந்து கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை (அது என்ன சிறப்போ தெரியவில்லை. சாதா பிரார்த்தனை என்று ஒன்று இருப்பது போன்றும் அந்த வேளைகளில் இறைவனின் அசிஸ்டெண்டுகள் பிரார்த்தனையை ஏற்பது போன்றும், சிறப்பு பிரார்தனை சமயத்தில் மட்டும் இறைவனே இருக்கின்ற வேலையெல்லாம் விட்டு விட்டு நேரடியாக வருவது போன்றும் ஒரு பெரும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் பக்தி வியாபாரிகள்) நடைபெற்றது என்று செய்திகள் வருகின்றனவே அன்றி மசூதியில் நடை பெற்றது என்று செய்திகளை காண முடிவதில்லை. பாரம்பரியத்தை அவர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள். .. ஆனால் இந்துக்களாகிய நாம்?

நாம் ஒவ்வோருவரும் நள்ளிரவு ஆலய தரிசனத்தை தவிர்த்தாலே ஆகம விதிகளுக்கு முரணான நள்ளிரவு கோவில் நடைதிறப்பு முடிவுக்கு வந்து விடும்...

நமசிவாய’ அல்லது “சிவாயநம’.....!!!

நமசிவாய’ அல்லது “சிவாயநம’ என்ற மந்திரங்கள் சிவனுக்குரியவை.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, ஐந்தெழுத்து உடையவை
  - .
இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
-
நமசிவாய என்று சொன்னால், வாழும் காலத்தில் செல்வவளம்,
தேவையான வசதிகள் பெறலாம்.

சிவாயநம என்று ஓதினால்,
வாழ்வுக்கு பின், மோட்சத்தை பெறலாம்.

வெறுமனே, சிவாயநம
என்று சொன்னால் போதுமா அல்லது அத்துடன் வேறு ஏதாவது
செய்ய வேண்டுமா?

சிவபுராணத்தில் ஒரு கதை உண்டு.

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அவருக்கு, நெய், பால் அபிஷேகம் மிகவும் பிடித்தமானது.

பூர்வத்தில் வாழ்ந்த பூஷ்ணன் என்பவனும்,
அவனது மனைவி சுமதியும், தங்கள் இறுதிக் காலத்தை முடித்து,

தேவலோகத்தில் வாழும் சிறப்பைப் பெற்றனர். சொர்க்கத்தில்
இருந்த தேவர்களை விட, இவர்கள் அதிக பிரகாசமான
முகத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் இருந்தனர்.

இதைக் கண்ட தேவலோகப் பெண் ஒருத்தி, சுமதியிடம், “நீயும்,
உன் கணவனும் எங்களை விட அதிக மகிழ்வுடனும்,
பிரகாசமாகவும் இருக்கக் காரணம் என்ன?’ என்று கேட்டாள்.

அதற்கு பதிலளித்த சுமதி,
“இதொன்றும் பிரமாதமில்லை.
என் கணவர், அரச பதவியில் இருந்தவர். எங்களுக்கு இருந்த
வசதிக்கேற்ப, சிவபெருமானுக்கு உகந்த யாகங்களைச் செய்தோம்.

அது மட்டுமில்லாமல், சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகமும்,
பால் அபிஷேகமும் தவறாமல் செய்வோம். இந்த அபிஷேகத்தின் விளைவாக,
நாங்கள் இத்தகைய நிலையை பெற்றோம்…’ என்றாள்.
-
சிவராத்திரி விரதம் மிகவும் எளிமையானது.

காலையில் நீராடிவிட்டு, நமசிவாய அல்லது சிவாயநம என
ஓதியபடியே இருக்க வேண்டும்;
சாப்பிடக் கூடாது. நோயாளிகள்
எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலையில்
சிவாலயத்திற்கு, வில்வ இலை கொண்டு செல்ல வேண்டும்.
இரவு கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும்.

முதல் கால பூஜைக்கு பால்,
அடுத்த பூஜைக்கு தயிர்,
மூன்றாம் கால பூஜைக்கு வெண்ணெய், நெய்,
நான்காம் கால பூஜைக்கு தேன்
ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.

அன்றிரவில் விழித்திருக்க வேண்டும். அப்போது,
சிவனை குறித்த ஸ்தோத்திரங்கள், தேவார, திருவாசகப் பாடல்களைப்
பாட வேண்டும்.

மறுநாள் காலையில், அவரவர் தகுதிக்கேற்ப, அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னதானத்துக்கு பின் சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
-
சிவபெருமான் உருவம், அருவுருவம், அருவம், எனும் மூவகை
நிலைகளில் காட்சி தருகிறார். கருவறையில் பெரும்பாலும்,
அருவத் திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார்.

அருவுருவத் திருமேனியாக
(உருவமே இல்லாத நிலை) திருப்பெருந்துறை போன்ற
சில கோவில்களில் அருள்புரிகிறார்.

சோமாஸ்கந்தர், தட்சிணா மூர்த்தி,
பிட்சாடனர், பைரவர் உள்ளிட்ட சில வடிவங்கள் உருவமுடையவை.
-
நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில்
சிவபெருமானை உருவ வடிவில் வழிபட்டு பலன் பெறலாம்.

சாந்தமே உருவான தட்சிணா மூர்த்தியாக வழிபடுபவர்கள், மன அமைதியும்,
ஞானமும் கைவரப் பெறுவர்.

வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால்,
முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும்
பைரவராக சிவனை வழிபட்டால்,
எதிரிகளின் தொல்லை நீங்கி,
தைரியம் உண்டாகும்.

ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால், மனமகிழ்ச்சியும்
குதூகலமும் ஏற்படும்.

அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க,
முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை தரிசித்தால்,
வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.

சிவராத்திரியன்று, குலதெய்வ வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு.
அவரவர் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
நன்மை நடக்கும்.....!!!


ரசவாத சித்தர் தங்கம்
-------------------------------

பசுவின் கோமியம் அன்றாடம் வீணாகிப்போகிறது. பஞ்சகவ்வியம் செய்யவும். வீடு தெளிக்கப் பயன் படுத்துவதற்கும், சித்த வைத்தியத்திலும் போக வேறெதுக்கும் அன்றாடம் இது பயன்படுவதாய் தெரியவில்லை. ஆனால் இந்த கோமியம் செம்பை பொன்னாக்கும் வல்லமைப் பெற்றது. ஆச்சரியத்தோடு பார்கிறீங்களோ?

அதுபோல், ஆழ்கடலிலுள்ள அடர் பாசிகளும் இரும்பை /செம்பை, தங்கமாக்கும். இதிலுள்ள பாக்டீரியாக்கள் முதலில் நீர்ம தங்கமாய் மாற்றி பிறகு திடப்படுத்துகிறது.
ஓரிலைத் தாமரையின் வேறை ஒரு ஜான் அளவு வெட்டி, அதில் பழுக்க காய்ச்சிய குண்டூசியை (ஒரு ஜாமம் வரை) செருகி வைத்து எடுத்தால், அது செப்பு ஊசியாக மாறியிருக்கும்.

இதுபோல எத்தனயோ தாவரங்கள் செம்பை தங்கமாக்க எளிமையாய் உதவுகிறது என்பது சித்தர் பாடல்களில் உள்ளது. செம்பை தங்கமாக்க அவர்கள் பயன்படுத்திய வஸ்துதான் முப்பூ. இதனோடு பச்சிலை சாற்றை பிழிந்து அரைத்து அதை அந்த செம்பின் மீது பூசி, அதன் மீது மண் சீலை அப்பி, ஒரு ஜாமம் வரட்டி புடத்தில் வைத்து எடுத்தால் பத்தரை மாற்று பொன் கிட்டும். யாருக்கு? எல்லோருக்கும் அல்ல. தன்னலம் கருதாமல், பரோபகார எண்ணம் கொண்டு தர்மநெறி வாழ்வபவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று சொல்கிறார். பலர் கையில் இருக்கும் பணத்தை கொட்டி, மூலிகைகளை பாஷாண்ங்களை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கம் செய்கிறேன் என்று முயன்று தோல்வி கண்டோரே அதிகம். அது சித்தர்களுக்கான 'பிறவித்' தங்கம் என்கிறார் போகர். கதிர்வீச்சு பௌதிக முறையில் இதை 'டிரான்ஸ்முடேஷன் ஆஃப் மெடல்ஸ்' என்போம்.

வலிமையான தங்க உலோகத்தை சங்குப்பூ தாவர சாறு கரைக்கும் வல்லமை பெற்றது. சூடு படுத்த அது பஸ்மம் / தவளம் போல் வெண்மை நிறமாய் மாற்றிடும். சில சமயம் கீழ்கண்ட மூலிகைகளின் தைலம் கூட அதில் பூசி வாத வேலை செய்யலாம்.

மேலே சொன்ன அந்த அதிசய மூலிகைகள் எவை? அவை: பொன்முசுட்டை, பொன்னின்னாவாரை, பொன்னூமத்தை, சிறியாநங்கை, பெரியாள், கருப்பு கோடாலி, சிவப்பு கொடிவேலி, போன்றவை. இதுபோல இன்னும் நிறைய உண்டு. இதற்கு மூலிகை பரிச்சயம் இருந்தால்தான் சரிப்படும். "தங்கம் பண்றேன்னு ஊர் பூரா பொய் சொல்லிகிட்டு திரியரானுங்கோ" என்று இன்றும் ஏளனமாய் பேசுவோர் உண்டு. தங்களுக்கு கிடைக்காத போது ஒரு ஏக்கம் /கோபம் வருவது ஞாயம்தானே !

இவையெல்லாம் 'போகர் 7000 -சப்தகாண்டம் ஒரு பார்வை' (லியோ புக் பப்ளிஷர்ஸ்) என்ற நூல் நான் எழுதும்போது விரிவாகத் தெரிந்து கொண்டேன். நான் தங்கம் செய்ததில்லை, செய்ய எண்ணமில்லை, சற்றும் ஆர்வமில்லை. அதுவாக வாய்க்கப்பெற்றதால் என்னிடம் வந்தது.

எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க? மூலிகையை தேடிப் பறிப்பதற்க?

*திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்* ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் *இது அக்னித் தலம்*. நால்வராலும் பாடப்பட்ட தலம்.

எங்கிருந்து நினைத்தாலும் *முக்தி கொடுக்கும் தலம்* இதுதான்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.

பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.

*கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்*

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் *24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது*.

ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.

கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.

இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.

142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.

பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.

காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான்.

*அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்*

இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

*காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்*.

ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.

அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்,

கிளி கோபுரம் (81 அடி உயரம்);

தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),

தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),

மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),

வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.

இதை காந்த மலை என்பர்.

காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

*மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்)*

கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.

இப்பாதையில் 20 ஆசிரமங்களும்,

360 தீர்த்தங் களும்,

பல சந்நிதிகளும்,

அஷ்ட லிங்கங்களும் உள்ளன.

*26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்*

அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.

மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

*உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்*

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.

அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன.

இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.

ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி.

இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.

அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது.

அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.

காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.

அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.

அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

*கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்

முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்*.

இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்,

மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.

திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.

*மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்*.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.

இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.

இதனால் குழந்தைப்பேறு கிட்டும்;

கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம்,

தென் கிழக்கே அக்னிலிங்கம்,

தெற்கே எமலிங்கம்,

தென்மேற்கே நிருதிலிங்கம்,

மேற்கே வருணலிங்கம்,

வடமேற்கே வாயுலிங்கம்,

வடக்கே குபேரலிங்கம்,

வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.

இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

*திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது*

கோயிலுக்கு உள்ளே *பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது*

அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,

அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.

திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில்

இடைக்காட்டு சித்தர்,

அருணகிரிநாதர்,

ஈசான்ய ஞானதேசிகர்,

குரு நமச்சிவாயர்,

குகை நமச்சிவாயர்,

ரமணமகரிஷி,

தெய்வசிகாமணி தேசிகர்,

விருப்பாட்சிமுனிவர்,

சேஷாத்ரி சுவாமிகள்,

இசக்கிசாமியார்,

விசிறி சாமியார்,

அம்மணியம்மன்,

கணபதி சாஸ்திரி,

சடைசாமிகள்,

தண்டபாணி சுவாமி,

கண்ணாடி சாமியார்,

சடைச்சி அம்மாள்,

பத்ராசல சுவாமி,

சைவ எல்லப்பநாவலர்,

பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்!

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்),

சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),

பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.

திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால்,

சிவனின் அருளுடன்,

மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

இதன் அடிப்பாகத்தில்

பிரம்மா,

தண்டு பாகத்தில்

மகாவிஷ்ணு,

நெய், எண்ணெய்

நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

எத்தனை எத்தனையோ அரசர்கள்,

கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,

கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,

இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்,


1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

.5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ...
23 இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.

24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

25 தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

26 முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

27 உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

28 அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

29 ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

30 அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.