Tuesday 3 January 2017

நாயுருவி வசியம்
     செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வசிகரமாகும் பின் அனைத்து வேர்களையும் எடுத்து சுட்டு கரியாக்கி அதை திலகமாக இட்டால் வசியம் உண்டகும் மேலும் இப்படி செய்தால் உடலில் அதிக உஷ்ணம் ஆகும் அதை தவிர்க்க பசும் பால் அருந்த வேண்டும். காப்பி, டீ, புகை, புலால் கூடாது.இது முக்கியம்
சுளுக்கு நீங்க மந்திரம்


" ஒம் சங்கு உருள, சக்கரம் உருள, சூலம்உருள, உரல்உருள, சமுத்திரம் ஏழும் உருண்டோடிப் போக சுவாகா"
                                           
                        - என்று சுளுக்கு உள்ள இடத்தில் இரும்பு ஆயுதத்தால் 108 - உரு செபித்து மந்திரிக்கவும். இதனால் சுளுக்கு நிவர்த்தியாகும்.
நாயுருவி வேர் கொண்டு வந்து 'பிரஷ்' போல் தட்டி பல் துலக்க வேண்டும். இவ்விதம் சில நாட்கள் துலக்கி வந்தால் பல்வலி,  பல் ஆட்டம்,  சொத்தைப்பல் இவை நீங்கும்.  பல் வெண்மையாகவும்,  கெட்டியாகவும்,  ஈறுகளுக்கு அதிக வெண்மையும் தரும்.
நாள் விழிப்பு

1) புதன்-வியாழன்-வெள்ளி = இரு கண்ணுள்ள நாட்கள்

2) ஞாயிறு- திங்கள் = ஒரு கண்ணுள்ள நாட்கள்
...
3) செவ்வாய் - சனி = குருட்டு நாட்கள்

மேற்குரிய நாட்களில்

இருகண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் நன்மையாகும்,

ஒரு கண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் மத்திம பலன் உண்டாகும்.

 குருட்டு நாட்களில் காரியங்கள் செய்யின் துன்பம் உண்டகும்,எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.

Monday 2 January 2017

யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்?
புராணங்களில் ஒரு கதை உண்டு.  கிருஷ்ணர் விலை மதிக்க முடியாத சமந்தக மணியை தேடி போனதாகவும், அதற்காக பெரும் யுத்தம் கூட நடந்ததாகவும் புராணங்கள்  சொல்கிறது.

அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தரித்திரம் என்பதே இருக்காதாம். மகாலக்ஷ்மியே அவர்களிடம் வாசம் செய்வாளாம். செல்வம் ஓடி வரும், வெற்றி தேடி வரும், வீரம் நாடிவரும்.

இது தெய்வங்களுக்கு உரியது.  தேவர்களுக்கு உரியது. மனிதர்களுக்கு கிடைக்க போவதில்லை.

நாக ரத்தினம் என்றொரு ரத்தினம் உண்டு. வாலிபம் கடந்து வயோதிகம் அடைந்த நல்ல பாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷ பையில்  இருந்து தன் விஷத்தை  இழக்காமல் இருந்தால், அந்த விஷமானது நாகரெத்தினமாக மாறும் என்று சொல்லபடுகிறது.

ஆனால் இதுவரை நாகரெத்தினத்தை பார்த்தவர்களும் இல்லை.  வைத்திருப்பவர்களும் இல்லை. ஆனாலும் மற்ற நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.

வைரம் வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும்.  எதிர் மறை எண்ணக்களை போக்கும்.   அதிஷ்டத்தை அழைத்து வரும். மனம் தெளிவாகும். நடக்குமா. நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா, முடியுமா, முடியாதா என்பது போன்ற எதிர் மறை எண்ணங்கள் எதுவும் வராது.
மாணிக்கம் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்று தருகிறது.  ரெத்த ஓட்டத்தை சீராக வைத்து இருக்கிறது.
மரகதம் அணிந்தால் அறிவை பிரகாசிக்க செய்யும்.  ஞாபக சத்தி அதிகரிக்கும்.  மறதி குணம்,  மந்த புத்தியை போக்கும்.  நரம்பு தொடர்பான வியாதிகளை நீக்கும்.
புஷ்பராகம் கண்பார்வையை சரி செய்யும். திடீர் அதிச்டங்களை அழைத்து வரும்.
வைடுரியம் எதிர் மறை எண்ணத்தை போக்கும். பில்லி சூன்யம் ஏவல் செய்வினை கோளாறுகள் வராமல் பாதுகாக்கும். எதிரிகளை எதிர்ப்புகளை  முறியடிக்கும்.
பவழம் வீரத்தை தரும். தேக்கு மரதேகம், தினவெடுத்த தோள்கள், ஆஷானுபாகுவான உடம்பு, என்று சொல்வது மாதிரி கட்டு மஸ்தான உடலை தருகிறது.
முத்து உடல் குளிர்ச்சியை தரும். மனம் தெளிவாகும்.
நீலக்கல் கிரக தோஷத்தை போக்கும்.
கோமேதகம் உடல் வெப்பம் சீராக இருக்க காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு ரெத்தினமும் ஒவ்வொரு பலன்களை தந்தாலும், அனைத்தையும்  ஒருவர் அணிந்தது கொள்ள முடியாது.

அப்படி அணிந்து கொள்ள வேண்டுமானால் செவ்வாய் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.  ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கலாம். உச்சம் பெற்று இருக்கலாம். அல்லது மேஷ ராசியில். விருச்சிக ராசியில் இருந்தால். அல்லது பிறந்தால் மட்டுமே ஒன்பது கல் மோதிரம் அணிய முடியும்.